டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் -2019

31.01.2019 திகதி; காலை 8.30 மணி
மேற்படி எமது பிரதேச செயலகத்தின் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது கிரான் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் 31.01.2019 திகதி அன்று காலை 8.30 மணியளவில் பிரதேச செயலாளரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதேச சபை பணியாளர்கள் மற்றும் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்குபற்றினர். இதில் கிரான் கிழக்கில் உள்ள 150 ற்கு மேற்பட்ட வீடுகள் பார்வையிடப்பட்டது.
இதன்போது சில வீடுகள் டெங்கு பரவுவதற்கான வாய்ப்பு கானப்பட்டதுடன் அவ்வீடுகளுக்கான ஆலோசனைகள் எங்களது உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டது. அதிகமான வீடுகள் சுகாதாரமான நிலையில் காணப்பட்டது.
















