தேசிய நேர்மை வாரம் -2026
 
பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தன் அவர்களின் தலமையில் “நேர்மைக் கலாசாரம் கிளீன் சிறிலங்கா”தேசிய நேர்மை வாரம் -2026 தொடர்பான நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 27/07/2026 ஆம் திகதி இன்றைய தினம் காலை 9.00 மணியளவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய சத்திய உறுதிமொழி எடுத்தல் நிகழ்வும் இடம்பெற்றதுடன் பிரதேச செயலாளரினால் இது தொடர்பான சிறப்பு உரையும் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர்,உதவிப்பிரதேச செயலாளர்,நிருவாக உத்தியோகத்தர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


உலக சுற்றுச்சூழல் தினத்தில் பசுமைப் புரட்சி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடந்த 05.06.2026 வெள்ளிக்கிழமை கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் திருமதி. நிருபா பிருந்தன் அவர்களின் தலைமையிலும் ஒழுங்கமைப்பிலும் புலிபாய்ந்தகல் கிரான் குளத்தினை சுற்றி “மூங்கில் மரநடுகை" நிகழ்வு மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும் நடைபெற்றது.
பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காற்றின் தரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் புவி வெப்பமயமாதலின் தாக்கங்களைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் பசுமைப் புரட்சியின் வாயிலாகப் பருவநிலை மாற்றத்தைத் தணிக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பசுமை நிறைந்த எதிர்காலத்தை நோக்கி எடுக்கப்பட்ட இந்த முயற்சி, இயற்கையுடனான மனிதனின் உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான அடையாளமாக அமைந்துள்ளது.
 
 

News & Events

27
Jul2026
தேசிய நேர்மை வாரம் -2026

தேசிய நேர்மை வாரம் -2026

தேசிய நேர்மை வாரம் -2026   பிரதேச செயலாளர்...

07
Jul2026
உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினத்தில் பசுமைப் புரட்சி உலக சுற்றுச்சூழல்...

Scroll To Top