போதைப்பொருள் தடுப்பு
21.02.2019ம் திகதி காலை 9.30ம
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு,கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோராவெளி கிராமசேவகர் பிரிவில் கௌரவ ஜனாதிபதி அவர்களின் விசேட திட்டமான "கிராமசக்தி மக்கள் இயக்கம்" வேலைத்திட்டத்தின் கீழ் இன்று 21.02.2019ம் திகதி காலை 9.30மணியளவில் போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் கோராவெளி கிராமசேவகர் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராம சேவையாளர் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
இவ்நிகழ்சியில் கிராமசக்தி மக்கள் இயக்க சங்க உறுப்பினர்கள், கோயில் நிருவாகசபை உறுப்பினர்கள்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராமமட்ட அமைப்புகள்,சமூர்த்தி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது போதைப்பொருள் பாவனையால் ஏற்படுகின்ற பாதிப்புகள் பற்றி கிராம மக்களுக்கு விழிப்பூட்டல் கருத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் குடும்ப பிரச்சினைகள்,குடும்பத்தின் பொருளாதார நிலமை என்பன பற்றி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது














