
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவில் தற்போது ஏற்பட்ட கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கிரானில் இருந்து புலிபாய்ந்தகல் பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.பொதுமக்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்களின் நன்மை கருதி கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தால் படகுச்சேவை மேற்கொள்ளப்படுகிறது.

















