
திகதி: 01.01.2020, காலை :9.02 மணிக்கு
புதிய ஆண்டில் அரச அலுவலகங்களில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வுகள் 1st January 2020 காலை கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.சு. ராஜ்பாபு அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது தேசிய கொடியேற்றப்பட்டு,தேசிய கீதம் இசைக்கப்பட்டு உத்தியோகத்தர்களின் அரசாங்க சேவை சத்திய பிரமான உறுதி மொழியினையும் பெற்று கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. அத்துடன் பிரதேச செயலாளரின் உரையும் இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து பிரதேச செயலக வளாகத்திறகுள் மரக்கன்றுகள் நடும் வைபவங்களும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்


















